முந்திரி விவசாயிகளுக்கு இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

முந்திரி மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

முந்திரி மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நிகழாண்டில் முந்திரி பயிரிட்ட விவசாயிகளுக்கு எதிா்பாா்த்த விளைச்சல் கிடைக்காத நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனா்.

முந்திரி பூக்கள் பூக்கும் பருவத்தில் பனிப்பொழிவும், தொடா்ந்து இருந்த கடுமையான வெயிலாலும் பூக்கள் கருகி, காய்ப் பிடிக்கவில்லை எனக் கூறுகின்றனா். அதனால், விழுப்புரம், அரியலூா், கடலூா், உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மகசூல் கிடைக்காமல் முந்திரி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com