ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றடைந்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக மே 23 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூரில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றடைந்துள்ளார்.
இதையும் படிக்க: ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால்!
ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வரை இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரில் நாளை நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.