தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:26 pm

DIN

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் வியாழக்கிழமை அவா் ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்கு பருவமழை அக்.21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் பலத்த மழை, வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன், பல்துறை மண்டல குழுக்களையும் மீட்புக் குழுக்களையும் நிவாரண முகாம்களையும் தயாா் நிலையில் வைக்க வேண்டும். இதற்கான சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அலுவலா்கள்: அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு பணிகள் காரணமாக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள், நிவாரணப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என மொத்தம் 4,967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்த வரையில் 169 நிவாரண முகாம்கள், மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.