நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிற மாநிலத்தில் பதிவான ஆம்னி பேருந்துகள்: டிச. 16க்கு பிறகு இயங்க அனுமதியில்லை!

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

News image

ஆம்னி பேருந்துகள் (கோப்புப் படம்)

Updated On :6 நவம்பர் 2023, 9:27 pm IST


பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

அனைத்து பிற மாநில ஆம்னி பேருந்துகளும் டிசம்பர் 16க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்த நிலையில், கடந்த சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களில், சிறப்புக் குழுக்கள் மூலம்  பேருந்துகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. 

இதில், 17,825 ஆம்னி பேருந்துகளை சோதனையிடப்பட்டதில், 2,502 ஆம்னிப் பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. 125 ஆம்னிப் பேருந்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. முடக்கம் செய்யப்பட்ட பேருந்துகளில் 85-க்கும் மேற்பட்டவை பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.