இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் மீண்டும் ஆஜர்

குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

News image
கோப்புப் படம்.
Updated On :2 பிப்ரவரி 2024, 3:17 am

DIN

குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகா் காலனியில் பிரசார பொதுக் கூட்டம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, அவா் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்தும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்தும் பேசிய பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட சமூகத்தினரையும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின்கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சீமான் இன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இவ்வழக்கில் இன்று சீமான் நேரில் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.