

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர், முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (நவ. 11) வரை பொதுமக்களுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.