கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி: காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சண்முகநாதர் கோயிலில் காப்பு கட்டிய பெண் பக்தர்கள்.
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 

கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சண்முகநாதர், சுருளி வேலப்பர் சுப்பிரமணியசாமி, கூடலூர் கூடல் சுந்தரவேலவர் மற்றும் லோயர்கேம்ப்பில் உள்ள வழிவிடுமுருகன் ஆகிய கோயில்களில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு ஷஷ்டி விரதத்தை தொடங்கினர். 

வரும் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜையும், சனிக்கிழமை காலை பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தர்கள் வருகின்றனர். மாலையில்  சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.