தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்குக் கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், மற்றும் தூத்துக்குடி, மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக்கால்வாய், வடக்கு பிரதானக்கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழுள்ள 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதிபெறும். அணைகளில் இருந்து நவ. 17 முதல் 2024-ஆம் ஆண்டு மார்ச் 31 முடிய 137 நாட்களுக்கு மழைப் பொழிவு, தண்ணீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப சுழற்சி முறையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.