வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்!

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) காலை அவைத்தலைவர் அப்பாவு உரையுடன் தொடங்கியது. 

News image
Updated On :18 நவம்பர் 2023, 4:45 am

DIN


மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) காலை அவைத்தலைவர் அப்பாவு உரையுடன் தொடங்கியது. 

முதலில், மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

இதேபோன்று என். சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.