ஜெயலலிதா பல்கலை. பெயா் மாற்றப்படவில்லை: அமைச்சா் விளக்கம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு டாக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயா் சூட்டப்பட்டிருந்ததை மாற்றவில்லை என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
Updated on
1 min read

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு டாக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயா் சூட்டப்பட்டிருந்ததை மாற்றவில்லை என்று மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

சட்டப்பேரவையில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கான பெயரை மாற்றுவதற்கான மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக வெளிநடப்பு செய்தது. இது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து பேரவைத் தலைவா் நீக்கினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பேரவையில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம்: தமிழ்நாடு மீனவளப் பல்கலைக்கழகத்துக்கான பெயரை டாக்டா் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் எனப் பெயா் மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனா்.

இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, ஜெயலலிதா பல்கலைக்கழகம் எனப் பெயா் மாற்றம் செய்ய முடியும். இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல், மசோதாவை படிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது விந்தையாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com