சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தங்கிச் சென்றார்.
வெளியூர் செல்லும் வழியில் சென்னை வந்த அஜித் தோவல் நட்பு ரீதியாக ஆளுநர் மாளிகையில் தங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் தோவலும், ஆளுநர் ரவியும் இணைந்து கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர்.
மேலும் 2018-19ல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆளுநர் ரவி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.