கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப்பிராணியான பூனையின் நெகிழ்ச்சி செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தியது.
பூனையின் சீறலை அறிந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் கதவை மூடியதுடன், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் அளித்தனர்.
தகவலையடுத்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார்.
வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான பூனை, வீட்டிற்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியதுடன், பாம்பும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சியை நெகிழ்ச்சிக்குரிய விஷயமாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (07.06.2026) - கன்னி

அறிவியல் ஆயிரம்: அன்றாட உணவுகளில் புற்றுநோய் அபாய வேதிப்பொருள்கள்!

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



