மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை இரவுமுதல் அதிகனமழை பதிவாகியுள்ளது.
இந்த பருவமழை தொடங்கிய பிறகு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மேட்டுப்பாளையத்தில் மட்டும் 373 மிமி அதிகனமழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர், கோத்தகிரி சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், மரங்கள் விழுந்துள்ளதாலும் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து!
ஏற்கெனவே மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.