கேரளம் செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
கேரளத்தின் மலப்புரம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றப் பின், சாலை வழியாக கூடலுர் நாடுகாணி பகுதிக்கு ராகுல் காந்தி வந்தடைந்தார்.
தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நாடுகாணி பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, சுல்தான்பத்தேரியில் இன்று அவர் தங்குகிறார். பின்னர், நாளை காலை வயநாடு செல்கிறார்.