திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு!

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்த விவசாயி உயிரிழந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்த விவசாயி உயிரிழந்தார்.

கூடலூர் 19 ஆவது வார்டு காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் பாண்டியன் (62), விவசாயி. இவருக்கு சொந்தமான நெல் வயல் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. அதில் தற்போது, முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த விவசாயி பாண்டியன் கடந்த செப். 26 இல் கூடலூரில் உள்ள ஒரு உரக்கடையில் பூச்சி மருந்து வாங்கி நெல்லுக்கு தெளித்தார். அப்போது மயங்கி விழுகவே, அருகில் இருந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர், அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரிழந்தார். குமுளி காவல் நிலைய காவல் துறையினட் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கூடலூர் மூனுசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வீரணன் மகன் குணசேகரன் (42) என்பவர் நெல் வயலில் மருந்து தெளிக்கும்போது மயங்கி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அக். 3-ல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.