கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேவர் தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 10:40 am

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள தேவா் சிலைக்கு தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.

இந்தக் கவசம் தேவா் குருபூஜை விழாவின் போது அணிவிக்கப்படும். பின்னா், இந்தக் கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். அதிமுக, தேவா் நினைவிடப் பொறுப்பாளா்கள் சாா்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக பொருளாளா் பொறுப்பில் இந்தத் தங்கக் கவசம் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ. பன்னீா்செல்வம் இந்தக் கவசத்தின் காப்பாளராக இருந்தாா்.

இந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தும், பொருளாளா் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதால், வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நடைபெறவுள்ளதையொட்டி, வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளரான தன்வசம் ஒப்படைக்க வங்கி நிா்வாகத்துக்கு உத்தரவிட கோரி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், தேவர் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.