கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காவிரி நீர்: நீடாமங்கலத்தில் கடையடைப்பு!

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. 

News image

காவிரி நீரை திறந்துவிடக்கோரி நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Updated On :11 அக்டோபர் 2023, 3:56 am

DIN


நீடாமங்கலம்: உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. 

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குபின் திறந்து விடப்படும் குறைந்தபட்ச நீரையும் தடுக்கும் பாஜக மற்றும் அமைப்புகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் உழவர் பெருமக்கள்மீது அக்கறையில்லாமல் அலட்சியம் காட்டும் மத்திய அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் காவிரிப்படுகை மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்திருந்தது.

இதன்படி, நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தபால் அலுவலகம் முன்பு மறியல் நடந்து வருகிறது. 

போராட்டத்திற்கு திமுக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி.ராசமாணிக்கம் தலைமை வகித்தார். மத்தியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன், திமுக ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த், ந.கவியரசு, மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் வீரா.தேசபந்து, திராவிடர்கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், நகரதிமுக செயலாளர் ஆர்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி டாக்டர் நிரோஜாகிஷோர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்  ஜான்கென்னடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் புதியவன்,மதிமுக நிர்வாகிகள் ராஜா,மாருதி.தியாகராஜன், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நீடாமங்கலம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.