பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!

வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த தனியார் பேருந்து.

Published On :

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வாழப்பாடி வழியாக சென்ற தனியார் பேருந்து, இன்று சனிக்கிழமை காலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அடுத்துள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறிய பேருந்து, சாலை தடுப்பில் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. 

Story image

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று, பேருந்து கண்ணாடிகளை உடைத்து, பேருந்து ஓட்டுநரான ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (33) மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.