‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோடியக்கரை: இலங்கை மீனவர் 2 பேர் கைது

நாகை மாவட்டம்,  வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெள்ளிக்கிழமை (செப்.15) கரை சேர்ந்த இலங்கை மீனவர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 7:21 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,  வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெள்ளிக்கிழமை (செப்.15) கரை சேர்ந்த இலங்கை மீனவர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நிக்சன் டீலக்ஸ் (38), காயூஸ் சுமத்திரன்(36) ஆகிய இரண்டு மீனவர்கள்  கோடியக்கரையில் கரை சேர்ந்தனர்.

இவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல்கட்ட விசாரணையில், கடலில் வேகமாக வீசிவரும் காற்றின் காரணமாக படகு திசை மாறியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.