தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது.