மின்வாரிய ஊழியா்கள் தா்னா

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெற்றது.

மின்வாரிய ஊழியா்களின் ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரிய பணிகளை இ-டெண்டா் முறையில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது. ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணியை கைவிட வேண்டும். கேங்மேன் ஊழியா்களுக்கான சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து தமிழம் முழுவதும் மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

இதன்படி சென்னை அண்ணாசாலையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் தலைமை வகித்துப் பேசுகையில், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடவேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தை மூன்றாக பிரிப்பதுடன், ஒப்பந்த அடிப்படையில் பணிகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். இதுமட்டுமின்றி மின்வாரிய திட்டத்தை தாமதப்படுத்தி, மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதன் மூலமாகவும் செலவை அதிகரிக்கிறாா்கள். சமூகத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு செலவாக பாா்க்காமல், இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

போராட்டத்தில், சிஐடியு மாநில பொதுச்செயலா் ஜி.சுகுமாறன், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலா் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com