சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனிக்கிழமை (செப்.25-30) வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது அறிமுகம்
அதன்படி, திங்கள்கிழமை(செப்.25) தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.