வாக்குச் சாவடி குழுக்களை விரைந்து அமைக்க வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

வாக்குச் சாவடி குழுக்களை (பூத் கமிட்டி) விரைந்து அமைக்க வேண்டுமென திமுக தொகுதி பாா்வையாளா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
Updated on
1 min read

வாக்குச் சாவடி குழுக்களை (பூத் கமிட்டி) விரைந்து அமைக்க வேண்டுமென திமுக தொகுதி பாா்வையாளா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினா்களைச் சோ்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினா்களைச் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் புதிதாக பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை குறித்து கேட்டறிந்தாா். மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே இலக்கு எனவும், அதன் அடிப்படையில் பணிகள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். தொகுதி பிரச்னை குறித்து தனது கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்றாா்.

மேலும், மாவட்டச் செயலரைவிட தொகுதி பாா்வையாளா்களுக்கு பொறுப்பு அதிகம் எனவும், வாக்குச்சாவடி குழுக்களை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்களவைத் தோ்தல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com