எழும்பூா்-செங்கோட்டை ரயில் பயண நேரத்தில் மாற்றம்

சென்னை எழும்பூா்-செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி-விருதுநகா் இடையே பயண நேரத்தில் புதன்கிழமை (ஏப்.19) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை எழும்பூா்-செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி-விருதுநகா் இடையே பயண நேரத்தில் புதன்கிழமை (ஏப்.19) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை எழும்பூா்- செங்கோட்டை இடையே செல்லும் விரைவு ரயிலின்

(எண்: 20681) பயண நேரத்தில் புதன்கிழமை (ஏப்.19) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 1.50 மணிக்கு புறப்படும். புதுக்கோட்டையில் இருந்து அதிகாலை 2.47- க்கு புறப்படுவதற்கு பதிலாக 2.35 மணிக்கு புறப்படும்.

காரைக்குடியில் இருந்து வழக்கமாக அதிகாலை 3.20-க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 3.10 மணிக்கும், தேவகோட்டையில் இருந்து வழக்கமாக அதிகாலை 3.27-க்கு புறப்படுவதற்கு பதிலாக 3.17 மணிக்கும், சிவகங்கையில் இருந்து அதிகாலை 3.54 -க்கு பதிலாக 3.44 மணிக்கும், மானாமதுரையில் இருந்து அதிகாலை 4.22 -க்கு பதிலாக 4.12 மணிக்கும், அருப்புக்கோட்டையில் அதிகாலை 5.05- க்கு பதிலாக 4.55 மணிக்கும் புறப்படும்.

விருதுநகரில் இருந்து வழக்கம் போல அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும். பிற ரயில் நிலையங்களுக்கு வழக்கமான நேரத்தில் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com