

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே சிறுமி காருக்குள் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, பாப்பாக்குடி அருகேயுள்ள பள்ளாக்கால் புதுக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா(வயது 29), இவரது கணவர் முக்கூடலைச் சேர்ந்த மாரியப்பன். குடும்ப தகராறு காரணமாக கனகா அவரது கணவர் மாரியப்பனை பிரிந்து அவரது மகள் சரண்யாவுடன்(வயது 7) பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வந்தார். சரண்யா அப்பகுதியில் அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கனகா அப்பகுதியிலுள்ள தனியார் பீடிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமி சரண்யா அப்பகுதியிலுள்ள பழனிக்குமார் என்பவரின் காரின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய கனகா சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது நீண்ட நேர தேடுதலுக்கு பின் சிறுமி சரண்யா காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.