புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-
புதுக்கோட்டை மாவட்டம் சீமானூா் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஜெயந்த் என்ற வீரா், பலியானாா். மாடு முட்டியதில் உயிரிழந்த அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து
ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.