
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத உள்ள தனி தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நிகழ் கல்வியாண்டில் (2023-2024) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடி தனித்தோ்வா்களும், ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தோ்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவா்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம்.
தனித் தோ்வா்கள் ஆக.10 முதல் 21-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவா்கள், மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனித் தோ்வா்கள் மட்டுமே 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.
இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் ஆக.10 முதல் 21-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக.21-ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.