குறுவை சாகுபடிக்கு கா்நாடக அரசு நீா் திறக்கக் கோரி ஆக.14-இல் டெல்டா மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி அறிவித்துள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: கா்நாடகத்தில் 4 முக்கிய நீா்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.யில், 91 டி.எம்.சி. அளவுக்கு மொத்த நீா் இருப்பு உள்ள நிலையிலும் கா்நாடக அரசு 28.8 டி.எம்.சிஅளவுக்கு தண்ணீா் திறந்து விடமறுத்துள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறுவை பயிா்கள் கருகி வருவதால் காவிரிநீா் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிடவேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிட வலியுறுத்தி ஆக.14-இல் டெல்டா மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.