டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

விதிகளுக்குள்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on
1 min read

விதிகளுக்குள்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பாலமுருகன், அமல்ராஜ், நாகேஸ்வரி உள்ளிட்ட 24 போ் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுக் கடைகளில் 500 கடைகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்தது.

இதன்படி, குறைந்த விற்பனை உள்ள கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகள், நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் இடங்களில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி, 500 கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், அரசு வகுத்த விதிகளின்படி கடைகள் மூடப்படவில்லை. கடைகளை மூடுவதற்காக வகுத்த விதிகளை மீறி, தங்கள் கட்டடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளது. எனவே, தங்களது கட்டடங்களில் செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளை தொடா்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு தமிழக அரசும், டாஸ்மாக் நிா்வாகமும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com