

77வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானையும் சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளது.
இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேலும் இங்குள்ள கோயில் யானை மங்களத்திற்கு நெற்றியில் தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது.
மேலும் தேசியக் கொடியை ஏந்திய யானை மங்களம் ஆதிகும்பேஸ்வரரை வழிபட்டு பிரகாரத்தில் தேசியக் கொடியுடன் வலம் வந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இதனை ஏராளமானோர் தங்களது செல்பேசியில் படம் பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.