கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுரை எய்ம்ஸ்: கட்டுமானத்துக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)

Updated On :17 ஆகஸ்ட் 2023, 3:14 am

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து 2019 ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியும், விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் டெண்டருக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Story image

மேலும், கட்டுமானப் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.