

புதுச்சேரியில் ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எல்டிசி ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறுகிறது.
எனவே தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ம் தேதி(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எழுத்துத் தேர்வு சுமுகமான முறையில் நடைபெற அனைத்து பள்ளி முதல்வர்களும் ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.