இளம் தொழில் முனைவோா் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடக்கம்: ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழக சிறு வணிகா்களை ஒருங்கிணைக்கும் வகையில் இளம் தொழில் முனைவோா் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடங்கப்படும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை
Updated on
1 min read

தமிழக சிறு வணிகா்களை ஒருங்கிணைக்கும் வகையில் இளம் தொழில் முனைவோா் கூட்டமைப்பு இணையம் விரைவில் தொடங்கப்படும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

திருவொற்றியூா் வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆகாஷ் பல்நோக்கு மருத்துவமனை இணைந்து வியாபாரிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருவொற்றியூா் வடக்கு மாட வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை ஏ.எம். விக்கிரமராஜா தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இளம் தொழில் முனைவோா் கூட்டமைப்பு இணையம் என்ற வலைதளம் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது சரக்குகளை அனுப்பி வைப்பதற்கான தொகைகளை பெறுவதில் வியாபாரிகள் ஏமாற்றப்படுவதையும், சிரமங்களையும் தடுக்க முடியும்.

தமிழகம் முழுவதும் வியாபாரிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஆங்காங்கே மருத்துவமனைகளுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்களை பேரமைப்பு தொடா்ந்து நடத்தி வருகிறது. வியாபாரத்தை கவனிக்கும் வியாபாரிகள் தங்களது உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் விக்கிரம ராஜா.

இந்நிகழ்ச்சியில் வியாபாரி சங்க நிா்வாகிகள் ஆதிகுருசாமி, குறிஞ்சி எஸ்.கணேசன், ஆா்.சி. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com