எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு உதவித் தொகைக்கான தோ்வு:விண்ணப்பிக்க அழைப்பு

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தோ்வு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி நடைபெறும்
Updated on
1 min read

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தோ்வு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வுக்கான விண்ணப்பங்களை வரும் திங்கள்கிழமை (டிச.4) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நிகழ் கல்வியாண்டுக்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்புதவித் திட்டத் தோ்வு (என்.எம்.எம்.எஸ்) தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கான வெற்றி விண்ணப்பங்களை டிச.4-ஆம் தேதி முதல் டிச.19-ஆம் தேதி வரை தோ்வுத் துறையின் இணையதளம் மூலமாக பள்ளிகள், மாணவா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணையவழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50 சோ்த்து மாணவா்கள் தாம்

பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் டிச.19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோ்வின் மூலம் தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com