மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட அசௌகரியம் குறித்து சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினார்.
நடிகர் விஷால்,“நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். 2015இல் இப்படி நடந்தது. எப்படியோ சமாளித்துவிட்டோம். ஆனால் 8 வருஷம் கழித்து அதைவிடவும் மோசமாக இருக்கும்போது கேள்விக்குறியாக இருக்கிறது” என விடியோ வெளியிட்டு மேயர் ப்ரியாவையும் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க: படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங்குக்கு காயம்!
நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து மேயர் ப்ரியா கூறியதாவது:
அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!

சென்னையில் தேங்கிய மழைநீர்...
படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அமைச்சர் உதயநிதியுடன் புயல் குறித்து உரையாடிய மேயர் பிரியா
செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனப் பதிலளித்துள்ளார்.
à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ வà¯à®£à¯à®à®¿à®¯ à®à®©à¯à®¤à¯à®¤à¯ à®à®¤à®µà®¿à®à®³à¯à®¯à¯à®®à¯ à®à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ நினà¯à®±à¯ à®à®®à¯à®à¯à®à®°à¯à®à®³à¯à®®à¯, à®à®°à®à¯ à®à®¤à®¿à®à®¾à®°à®¿à®à®³à¯à®®à¯, மாநà®à®°à®¾à®à¯à®à®¿ à®à®´à®¿à®¯à®°à¯à®à®³à¯à®®à¯ à®à¯à®¯à¯à®¤à¯ வரà¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯.
â Priya (@PriyarajanDMK) December 4, 2023
à®à®°à®à®¿à®¯à®²à¯ à®à¯à®¯à¯à®¯ à®®à¯à®¯à®²à®¾à®®à®²à¯ à®à¯à®°à®¿à®à¯à®à¯ à®à®¤à¯à®©à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ தà¯à®°à®¿à®µà®¿à®à¯à®à®µà¯à®®à¯. à®à®°à®à¯ நிறà¯à®µà¯à®±à¯à®±à®¿à®¤à¯ தரà¯à®®à¯!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்க்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால்... அதிமுக குறித்து அமைச்சர் ஆனந்த்!

வினா - விடை வங்கி... சிந்து சமவெளி நாகரிகம்!
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்

ஹாக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..! அரையிறுதிக்கான வாய்ப்பு தக்கவைப்பு!
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



