
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ககன் தீப் சிங்பேடி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் தீரஜ் குமார், தமிழக நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளர் விஜயகுமார், சுற்றுலா, கலாசாரம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன், சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் ஆகியோருக்கு அதே துறைகளில் கூடுதல் தலைமைச்செயலாளர் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.