மழை பாதிப்பு: ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 

‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். 
மழை பாதிப்பு: ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 
Updated on
1 min read

‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். 

மிக்ஜம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகள் அருகே உள்ள பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை வியாழக்கிழமை தொடங்கியது. மழைநீா் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன.

இந்த நிலையில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

முன்னதாக ‘மிக்ஜம்’புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7ஆம் தேதி சென்னை வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com