கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மத்தியக் குழு சந்திப்பு!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

News image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர்.

Updated On :14 டிசம்பர் 2023, 6:09 am

DIN

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழுவினர், விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு  சென்னை வந்தடைந்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த இரு நாள்களாக 4 மாவட்டங்களிலும் மத்தியக் குழு ஆய்வு செய்தது. 

இரு குழுக்களாகப் பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். 

இரு நாள்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மத்தியக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

தொடர்ந்து, மத்தியக் குழுவினர் தில்லி சென்று மத்திய அரசிடம் வெள்ள பாதிப்பு ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும். ஒரு வாரத்தில் மத்தியக் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.