‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை பார்த்தால் போதும் - அமைச்சர் சேகர் பாபு

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 டிசம்பர் 2023, 6:49 am

DIN

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளிடம் கூறியதாவது, தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர் எதிர்கால திட்டம், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான்.

ஏற்கெனவே தமிழக மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனர். மீண்டும் தோல்வியைத்தான் கொடுப்பாளர்கள். என்றார் 

முன்னதாக வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  வெள்ளத்தைக் கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தென்மாவட்டங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்நிலைகளை தூர்வாரவில்லை. இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.