நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை பார்த்தால் போதும் - அமைச்சர் சேகர் பாபு

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 டிசம்பர் 2023, 6:49 am

DIN

தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளிடம் கூறியதாவது, தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர் எதிர்கால திட்டம், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான்.

ஏற்கெனவே தமிழக மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனர். மீண்டும் தோல்வியைத்தான் கொடுப்பாளர்கள். என்றார் 

முன்னதாக வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  வெள்ளத்தைக் கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தென்மாவட்டங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்நிலைகளை தூர்வாரவில்லை. இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.