/

அழகர்கோயிலில் இனி நாள் முழுவதும் பிரசாதம்

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. 

News image

அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)

Updated On :31 டிசம்பர் 2023, 12:28 pm IST

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. 

இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி அழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்முழுவதும் இலவச லட்டு வழங்கப்படும்.

இதேபோல் திருப்பரங்குன்றம் முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பிரசாதம் தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், திருவண்ணாமலை கோயிலிலும் தினமும் பிரசாதம் தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022 ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் படிபடியாக பல்வேறு கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.