திருச்சி: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை அமைதிப் பேரணி நடைபெற்றது.
திருச்சி சி.என். நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சாலை வரையில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், மாநகரச் செயலர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இதேபோல, அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, அமமுக, தேமுதிக என பல்வேறு கட்சியின் நிர்வாகிகளும் சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


