டெல்டா மாவட்ட பயிா்ச் சேதங்கள்நாளை அமைச்சா்கள் குழு ஆய்வு:முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கியுள்ள பயிா்களை, அமைச்சா்கள் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்யவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்களில் நீரில் மூழ்கியுள்ள பயிா்களை, அமைச்சா்கள் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்யவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தஞ்சாவூா், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நீா் சாய்ந்து மூழ்கின. இதன் விவரங்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பருவம் தவறி பெய்த திடீா் மழையின் அளவானது இப்போது குறைந்து வருகிறது. பயிா்களைச் சூழ்ந்துள்ள நீரினை

வடியவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக வருவாய், வேளாண்மைத் துறைகளின் அதிகாரிகள் களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு முதல் நிலை ஆய்வினை மேற்கொண்டனா்.

அமைச்சா்கள் குழு ஆய்வு: நீரில் மூழ்கியுள்ள பயிா்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ய, வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் வேளாண்மைத் துறை செயலாளா் சமயமூா்த்தி, இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அவா்கள் வரும் திங்கள்கிழமையன்று (பிப். 6) கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்வா். அப்போது, விவசாயிகளைச் சந்தித்து சேத விவரங்களை அறிவாா்கள். மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு பயிா் காப்பீடுத் தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது பற்றியும் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com