டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கல்லூரித் தோழர் டி.பி.கஜேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

சென்னையில் உடலநலக் குறைவால் காலமான திரைப்பட இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரித் தோழருமான டி.பி. கஜேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 3:35 pm IST


சென்னையில் உடலநலக் குறைவால் காலமான திரைப்பட இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரித் தோழருமான டி.பி. கஜேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்  உடலநலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். 

அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திரைப்பட இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரித் தோழருமான டி.பி. கஜேந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.