சென்னை: ஆவின் நிறுவனத்தின் காலியிடங்கள் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காதவாறு ஆவினில் காலிபணியிடங்களை நிரப்பும் பணியை முறைப்படுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.