ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த தெரிவித்ததாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 409 மத்திய காவல் படை வீரர்களும், பறக்கும் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்வதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com