சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலை சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மத்திய அதிவிரைவுப் படையினர் (RAF: Rapid Action Force) ஆய்வு மேற்கொண்டனர்.
நடராஜர் கோயில் மற்றும் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுபதி முன்னிலையில் துணைத்தளபதி விஜயன் மற்றும் 100 அதிவிரைவுப் படை பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.