சென்னை: ஒன்றிய அரசு என்பது தவறில்லை. ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யும் போதுதான் பிரச்னை ஆகிறது என்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
ஒன்றிய அரசு என்று அழைப்பதிலும், தமிழ்நாடு என்று அழைப்பதிலும் ஆளுநர் ரவிக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு என்று அழைப்பதைத் தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று ஒன்றிய அரசு என்பதை அரசியலாக்குவது தவறு என்று பேசியிருக்கிறார்.
இதையும் படிக்க | பொங்கல் விழாவில் மாநில அரசு இலச்சினையைத் தவிர்த்த ஆளுநர்!
இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 80 மாணவர்கள் பங்கேற்ற எண்ணித் துணிக என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகிவருவோர் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. எந்த மொழியும் கற்பது தவறில்லை. அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால் இந்தி கற்றுக் கொள்வது பயன்படும் என்று கூறினார்.
மேலும், நேர்முகத் தேர்வு என்பது மனத்திடத்தை சோதிக்கும் தேர்வு என்பதால், நீங்கள் திடமாகவும் எனர்ஜியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளீர்கள். சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.
கேள்விகளுக்கு அவசரமாக பதிலளிக்க வேண்டாம். நிதானமாக பதில் அளியுங்கள். நீங்கள், நீங்கள்தான். நீங்கள் மற்றவர்கள் அல்ல. பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். அதை சங்கடமாகக் கருத வேண்டாம் என்று கூறினார் ஆளுநர் ஆர்.என். ரவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா: அமளிக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



