தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆளுநருடன் வந்தவர் பேரவை உரிமை மீறல்: அறிக்கை அளிக்க உத்தரவு

ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை உரிமை மீறலில் ஈடுபட்டதாக திமுக எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2023, 6:58 am

DIN

ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை உரிமை மீறலில் ஈடுபட்டதாக திமுக எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தொடங்கியது. அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர் பேரவை நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்ததாக உரிமை மீறல் பிரச்னையை புதன்கிழமை திமுக எழுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பேசுகையில், ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவரது செல்போனில் பதிவு செய்தார். இது பேரவை விதிகளின்படி தவறாகும். உடனடியாக அவைக் காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.