ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை உரிமை மீறலில் ஈடுபட்டதாக திமுக எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தொடங்கியது. அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர் பேரவை நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்ததாக உரிமை மீறல் பிரச்னையை புதன்கிழமை திமுக எழுப்பியுள்ளது.
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பேசுகையில், ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவரது செல்போனில் பதிவு செய்தார். இது பேரவை விதிகளின்படி தவறாகும். உடனடியாக அவைக் காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.