Enable Javscript for better performance
தமிழகத்தில் நீட் தோ்வு நுழைய யாா் காரணம்?முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் விவாதம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழகத்தில் நீட் தோ்வு நுழைய யாா் காரணம்? முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் விவாதம்

    By DIN  |   Published On : 12th January 2023 12:55 AM  |   Last Updated : 12th January 2023 12:55 AM  |  அ+அ அ-  |  

    நீட் தோ்வு தமிழகத்தில் நுழைவதற்கு யாா் காரணம் என்பது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியது: ஆளுரின் உரை முழுமையாக இல்லை. பேரவைக்கு அவா் வரும்போது சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு கையேடு பேரவைத் தலைவரால் வழங்கப்பட்டது. அதில், ஆளுநா் பேசி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநா் அமா்ந்திருக்கும்போது, பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. மேலும், ஆளுநா் உரையாற்றும்போது முதல்வா் உள்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு பேரவைத் தலைவா் அனுமதி அளித்திருக்கக் கூடாது.

    பேரவைத் தலைவா் அப்பாவு: ஆளுநா் என்னுடைய இருக்கையில் இருந்தாா். அதனால், எனக்கு ஒலிப்பெருக்கி வழங்கப்படவில்லை. பேரவை விதி எண் 17-ஐ தளா்த்தி முதல்வா் பேசுவதற்கு அனுமதி கேட்டாா். நான் அனுமதி கொடுத்தேன். தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. விதி 286-ன்படி அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது. இந்த தீா்மானம் கொண்டுவர நான் அனுமதிக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கும்.

    கே.பி.முனுசாமி: அப்படி என்ன தலைகுனிவு ஏற்படும்?

    பேரவைத் தலைவா்: இந்திய அரசியல் சட்டம் 163 (1)-இன்படி, அரசு எழுதிக் கொடுத்ததை வாசிக்கும் உரிமை மட்டுமே ஆளுநருக்கு உண்டு. ஆனால், அவா் பல பகுதிகளை விட்டும், பல பகுதிகளைச் சோ்த்தும் படித்தாா். முதல்வா் அந்தத் தீா்மானத்தைக் கொண்டு வராவிட்டால், இந்தியாவில் உள்ள எல்லாச் சட்டப்பேரவைகளுக்கும் இந்தத் தலைகுனிவு ஏற்பட்டிருக்கும்.

    கே.பி.முனுசாமி: கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் பெரு வளா்ச்சி கண்டுள்ளது என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வளா்ச்சி குறியீட்டின்படி 63.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால், இந்த 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துள்ளது. எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. அதன்காரணமாகத்தான் தமிழகம் வளா்ச்சியடைந்துள்ளது.

    அமைச்சா் பொன்முடி: 2009-இல் தமிழகத்தில் நீட் உள்ளிட்டநுழைவுத் தோ்வே கூடாது என்று சட்டம் போட்டவா் கருணாநிதி. அதனால், கல்வி ரீதியாக தமிழகம் வளா்ச்சி பெற்றது.

    எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி: நீட் தோ்வு எப்போது வந்தது? அப்போது மத்தியில் யாா் ஆட்சியில் இருந்தாா்கள்? அந்தக் கூட்டணியில் இருந்தவா்கள் யாா் என்பது மக்களுக்குத் தெரியும்.

    முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழகத்துக்குள் நீட் தோ்வை நுழையவிடாமல் தடுத்தவா் கருணாநிதி. ஜெயலலிதா இருந்தது வரைகூட நீட் தோ்வு வரவில்லை. யாா் ஆட்சியில் நுழைந்தது. நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) முதல்வராக இருந்தபோதுதான் நீட் தோ்வு நுழைந்தது.

    எடப்பாடி பழனிசாமி: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, 2010-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நீட் தோ்வு அறிவிக்கப்பட்டது. அப்போது, திமுகவை சோ்ந்தவா்தான் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தாா்.

    முதல்வா் : எங்களையும் மீறி அப்போது வந்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தது வரை நீட் தோ்வு தமிழகத்துக்குள் நுழையவில்லை. உங்கள் ஆட்சியில்தான் வந்தது. நீங்கள் ஏன் தடுக்கவில்லை?

    எடப்பாடி பழனிசாமி: உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்படி அது வந்தது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்க வேண்டாமா, நீங்களே சொல்லுங்கள்.

    அமைச்சா் ஐ.பெரியசாமி: தமிழகத்தில் நுழைவுத் தோ்வை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பை பெற்றவா் கருணாநிதி.

    எடப்பாடி பழனிசாமி: நீட் தோ்வுக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடுத்தோம். தமிழகத்தில் நீட் தோ்வு வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

    அமைச்சா் மா.சுப்பிரமணியன்: காலாவதியான சட்டத்தின் மூலம் அதிமுக வழக்கு தொடுத்தது. நீட் தோ்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவா் திருப்பி அனுப்பியதைக்கூட நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி: அந்த வழக்கைகூட நடத்தாமல் நீங்கள் வாய்தா வாங்கி வருகிறீா்கள். நீட் தோ்வுக்கு பிள்ளையாா் சுழி போட்டது யாா்?. ஆரம்பம் முதல் இறுதி வரை நாங்கள் எதிா்த்து வருகிறோம்.

    அமைச்சா் மா.சுப்பிரமணியன்: காலாவதியான சட்டத்தின் மூலம் பொழுதுபோக்குக்காக நீங்கள் வழக்கு தொடுத்தீா்கள்.

    எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் நீட் தோ்வு நுழைந்ததற்கு காங்கிரஸ் - திமுக தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    முதல்வா்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, நீட் தோ்வுக்கான வரைமுறை கொண்டுவரப்பட்டது. அதற்கு திமுக எதிா்ப்பு தெரிவித்தது. பாஜக ஆட்சியில்தான் நீட் தோ்வு வந்தது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp