

பொங்கல் பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் எனத் தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசுத் தரப்பில் இன்றுமுதல் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதையும் படிக்க | இரண்டு இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார அமைப்பு
மேலும், சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் சிறப்புப் பேருந்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள அதுகுறித்து புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய இரண்டு அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.